தமிழ் கதைகள் சிறுகதைகள் | Tamil Stories | Kathaigal

தமிழ் கதைகள் Tamil stories Kathaigalஇங்குள்ள தமிழ் கதைகள் ( Tamil Stories ) சிறுகதைகள்  முழுக்க முழுக்க சொந்த கற்பனையே. எங்கிருந்தும் பிரதி எடுக்கப்பட்டவை அல்ல. ஒரு சில தழுவல்களாக இருக்கலாம். மேலும் கதை எழுதுவதன் மூலம் எப்படி சம்பாரிப்பது என்பதற்கான என்னுடைய பதில்களும் தருகிறேன்.


Read here the Tamil Stories which is not a copy of any Epic, Classic, Magazine, and the one that exists in other Blogs. The story that is written here completely unique and owned by this Blog Author and never finds anywhere on the internet. Even though these are not copied, but could be inspired.

Few tips have been given at the end of this article about How to earn money by Writing Tamil Stories?

இந்த வலைதளத்தின் கதை எப்படி இருக்கும்? 
இந்த பிளாக்கின் கதைகள் குழந்தைகளுக்கான கதைகளாக இல்லாமல் புதிதாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், எதார்த்தமான கதைகளை விரும்புவோர்க்கும் விரும்பும் வகையில் நகரும். அறிவுபூர்வமான கதைகள் அவ்வபோது வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மர்மம் போன்ற கதைகளும், புராண கதைகளின் புனைவுகும் கதைகளாக அவ்வப்போது வெளிப்படும். எப்போதும் வித்தியாசமான வியக்கத்தக்க வகையிலான கதைகளையே எழுத வேண்டும் என்றே சிந்திப்பேன். அதனால் நீங்கள் வாசிக்கும் எந்த ஒரு கதையும் தங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். 

How about the Tamil stories in this blog?

The stories are not just for kids, which is for the people who are interesting in new things and expecting stories logically. Also, It will be the knowledge-based, Mystery, Epics Fiction. As I am always thinking to write the unique one, I hope you will enjoy my creations. So here is the list to read. 

தமிழ் கதைகள் பட்டியல் | Stories List | Tamil Kathikal

மென்பொருள்  நிறுவனத்தில் பணிபுரிபவரின் பார்வையில் ஒரு காளான் கடைக்காரர் தொழில்.

வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து Software Engineerஆக பணிபுரியும் கார்த்திக், வேலையே முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் மாலை நேரம் மறைந்து சற்றே இருள் சூழ்ந்த நேரத்தில் பேருந்திலிருந்து இறங்கினான். வரும் வழியில் சற்று பசிக்கவே, ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று மேலும் படிக்க

ராட்சசன்
 
(Fantacy Tamil Story)
மலையில் மற்றும் காட்டில் வாழும் கூட்டங்களை பற்றிய கதை. வேற்றுலக வாசிகளோடான அவர்களின் யுத்தம் பற்றிய கதை. 
முல்லை நிலத்தில் வாழும் சிறு கூட்டம்விவசாயம் செய்துதான் வாழவேண்டும் என்ற தேவையே இல்லாமல் ஆரோக்கியமான இயற்கையான வாழ்க்கை முறையை இயல்பாகவே வாழ்கின்றது. மேலும் படிக்க


மங்
காத்தா டா
 (Twisted Tamil Story)
நீ  உள்ளே நான் வெளியே. என்ன ஒரு தந்திரம். உஷாரா இருங்கப்பா.

"குப்புசுவாமி உயர்தர சைவ அசைவ உணவகம்" என்ற வண்ண மயமான பலகையுடன் வாடிக்கையாளர்களை வரவேற்றது அந்த உணவு விடுதி. உள்ளே வேலையாட்கள் அனைவரும் பரப்பாக இயங்கிகொண்டிருந்தனர். ஆர்டர்கள் எடுக்கப்பட்டும்கண்ணைப்பறிக்கும் விதவிதமான Read More


இயந்திரத்தின் பரிகாரம்
 (Science Fiction Tamil Story)
அடடே எதிர்காலத்தில் இப்படியும் ஒரு இயந்திரமா! இப்படியெல்லாம் செய்யுமா?

தகுந்தன தப்பிப்பிழைக்கும்” என்ற டார்வினின் கூற்றுப்படி காலத்தின் வேகத்தில்,தேவையானவை நிலை நிறுத்தப்பட்டு தேவையற்றவை புதைக்கப்படுகின்றன. அது எதுவானாலும் சரி. அறிவியலின் தாக்கத்தினால் இன்று நமக்கே தெரியாமல் மெது மெதுவாக மனிதனின் தனித்தன்மையான ஒன்றை இழக்கிறோம். இக்கதையின் ஓட்டத்தில் அது என்ன என்பதன் விடை கிடைக்கும். Read More


பேருந்து பயணத்திற்கான காலப்பயணம்
 
(Science Fiction Tamil Story)
எங்கே இந்த பேருந்து. எங்கு தேடியும் கிடைக்கவில்லையே. திருச்சி டு மும்பை 20 நிமிஷத்துலையா?

எங்கு நோக்கினும் இயந்திரத்தின் ஆதிக்கம். அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள்தானாக அழைத்துசெல்லும் இயந்திர வாகனங்கள்அதற்குத்தேவையான மின்சாரமேற்றும் அங்கங்கு நிறுவப்பட்ட மின்னேற்றும் கம்பங்கள்இதற்கிடையே சாலை பயணிகளை ஒழுங்குபடுத்தும் ஒளிரும் சாலையோர திரைகள் மற்றும் சாலையை கண்காணிக்கும் பறக்கும் பறகலம். Read More


எதில் விஷம் கலந்துள்ளது? - 
( Puzzled Tamil Story)

முன்னொரு காலத்தில் சீமந்தநாடு என்னும் பகுதியை ஆட்சி செய்து வந்த இந்துசேகரன் என்ற மன்னன் மிகவும் கருணையுடையவன். ஆனால் தம் மக்களுக்கும் ஏதாவது தீங்கு என்றால் எந்த எல்லை வரைக்கும் செல்பவன். அந்த அளவுக்கு மக்கள் பற்று கொண்டவன். எதிரிகளை வலைப்பதிலும், கொடியவர்களை பிடிப்பதிலும் திறமைசாலி. Read More

The University of Grape Garden (Mystery - Writing...)

ஒரு திராட்சை ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திலுள்ள மர்மங்கள் பற்றிய கதை. 

மிகவும் பரந்த அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட நிலப்பரப்பு. அங்கு நிறைய வசிப்பிடங்களும் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்வதற்கு முக்கியமான காரணம் அங்கு அமைந்துள்ள பாரம்பரியமான பல்கலைக்கழகம். அது இரு நூற்றாண்டுக்கும் முன் நிறுவப்பட்டு இன்றளவும் அதன் சிறப்பு குறையாமல் மாபெரும் ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்ட இடம். இன்றுவரை வேறெந்த பல்கலைக்கழகத்தாலும் மிஞ்ச முடியாத அளவுக்கு அறிவு பெட்டகங்களை தன்னகத்தே கொண்டு, வரும் அனைவரும் சிறந்த அறிவாளனாக மாற்றும் சொர்க்கம். Continue Reading...

Batman Vs Joker Conversation in Tamil

பேட்மேன் மற்றும் ஜோக்கர் இடையேயான கற்பனை வசனங்கள். இது வெறும் கற்பனையான கருத்து பரிமாற்றம் மட்டுமே. மேலும் படிக்க...


கதை எழுதுவதன் மூலம் எப்படி சம்பாதிப்பது? Earn From Tamil Stories

உங்களுக்கு கதை எழுதுவது பிடித்தமான செயலாகவோ அல்லது பொழுது போக்காகவோ இருக்கும். அதனால் உங்கள் கற்பனையில் உதித்த அருமையான கதையை உங்களுடனேயே எழுதி வைத்துகொள்வதில் யாருக்கு என்ன லாபம். உங்களின் கதையா மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதினாலேயே அந்த கதைக்கு தரும் மதிப்பாகும். அதற்கு தகுந்த பாராட்டை பெறுவதும் உங்களுக்கு அவசியமாகும். அதுவே உங்களை மென்மேலும் சிறந்த கதைகளை எழுத ஊக்கமளிக்கும்.

உங்களுக்கு ஊக்கமளிக்க கூடிய, உங்களின் படைப்புகளை அடையாளம் காட்டுவதற்கும் அதற்குரிய சன்மானத்தை அளிப்பதற்கும் நான் அறிந்த சில வழிமுறைகளை தங்களுடன் பகிர்கிறேன்.

தற்போதைய நடைமுறையில் சமூக வலைதளங்களில் உங்களின் படைப்புகள் பலரை மகிழ்சியூட்டலாம். அதனால் உங்களுக்கு பலரின் பாராட்டுகள் கிடைக்கலாம். ஆனால் அது நீண்ட நாட்கள் நிலைதிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் சரியான ஊடகத்தில் உங்களின் படிப்புகள் நிலைப்பெருவது அவசியமாகும். உங்களின் படைப்புகள் மற்றவர்களை மகிழ்விப்பதோடு அது உங்களுக்கும் பயனளிப்பதாக இருப்பின் மிக சிறப்பு.

சரி. இப்போது நேராக நமது தலைப்பிற்கு வருவோம். உங்களின் படைப்புகளை ஒரு புத்தகமாக மாற்றினால் நிச்சயம் அது உங்களின் சொத்தாகும். ஆனால் இது எப்படி சாத்தியம். தற்போதுள்ள காலத்தில் நீங்கள் உங்களின் புத்தகத்தை எழுதி விற்பனை செய்ய வேண்டிய வேலை அவசியமில்லை. நீங்கள் எழுதினால் மட்டும் போதும். உங்களிடம் ஒரே ஒரு கணினி மட்டும் இருந்தால் போதும். Microsoft Word அப்ளிகேசனில் உங்களின் கதைகளையோ அல்லது கட்டுரைகளையோ அல்லது நாவலையோ எழுதி கொள்ளவேண்டும். கீழ்க்கண்ட இரு முறைகளில் உங்கள் கதைகள் மூலம் சம்பாதிக்கலாம். 

Amazon Kindle Publish
Medium
Mintly

மேலும் படிக்க



The Chakraviyuha and Abimanyu (Scripting...)

அபிமன்யு சக்ரவியூகத்தை எவ்வாறு உடைத்தான் மற்றும் ஏன் அவனால் அதனை விட்டு வெளியேறவில்லை என்ற கேள்விக்கு தர்க்க ரீதியான நுணுக்கமான பதிலாய் இந்த கதை இருக்கும். இந்த கதையை வெளியிட்டவுடன் தெரிந்துகொள்ள Subscribe செய்து இணைந்திருங்கள்.

தமிழில் கதைகளுக்கான வலைத்தளங்கள் தொக்குக்கபட்ட பட்டியல் கீழுள்ள லிங்கில் அறியலாம். 
Here is the list of blogs and youtube channels for Tamil kids story 

Write your own story நீங்களே கதை எழுதலாம்

இந்த வலைத்தளத்திலும் உங்களுக்கு தோன்றும் கதைகளை எழுதி அனுப்பலாம். உங்கள் கதைகள் இங்கு பிரசுரிக்கப்படும். அது உங்களுடைய சொந்த படைப்பாக இருக்க வேண்டும். ஆசிரியர் பற்றியும் உடன் எழுதி அனுப்ப வேண்டும்.

Contact பக்கத்திலுள்ள Email முகவரிக்கு உங்கள் கதைகளை அனுப்பலாம்.

கதை எழுதுவது எப்படி? | How to write Tamil Stories?


கதை எழுதுவதில் என்னென்ன வகைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

குறுங்கதை  - 600 வார்த்தைகள் வரை
சிறுகதை    - 7500 வார்த்தைகள் வரை
நெடுங்கதை - 7500 முதல் 17499 வார்த்தைகள் வரை
குறுநாவல்  - 17500 முதல் 39999 வார்த்தைகள் வரை
நாவல்      - 40000 மற்றும் அதற்கு மேல் 

கதையை ஆரம்பிக்கும் முன், எதை மையப்படுத்தி எழுத போகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதை நோக்கியே கதை அம்சம் நகர வேண்டும். முடிந்தால் உங்களின் வாழ்க்கை அனுபவங்களை கலப்பது சிறந்தது. அறிவியல் சம்பந்தமான புனைவு கதை என்றால் அறிவியலின் எல்லைக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.  கற்பனை கதை என்றால் இதற்கு எல்லையே இல்லை. உங்களின் கற்பனையை எப்படி வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். 



கதை எழுதும்போது உங்களின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து தொடங்கலாம். கதாபாத்திரங்கள் பேசும் வசங்களுடன் உங்கள் கதையை துவங்கலாம். பொதுவாக கதை எழுதுவதற்கென்று எந்த ஒரு நடை முறையும் வகுக்கப்படவில்லை. நீங்கள் எழுதும் கதை மற்றவர்களுக்கு வாசித்து மிகவும் எளிமையான முறையில் புரிந்து கொள்ளும்படி இருந்தாலே அல்லது அவர்களது ஆர்வத்தை தூண்டினாலே போதும். அது ஒரு சிறந்த கதையாக உருப்பெறும். 

கதைகள்(Stories) எழுதும்போது அதில் வரும் கற்பனை கதாபத்திரம் வசனம் பேசும் இடங்களில் நீங்கள் அந்த பாத்திரமாகவே மாறினால் தக்க வசனம் உங்களுக்குள் உதிக்கும். நல்ல வசனங்கள் ஒரு கதையின் தூண்களாக செயல்படும்.

மேலும் கதை எழுதுவதை அறிந்து கொள்ள தமிழ் எழுத்தாளர்களின் வலைப்பதிவுகளை வாசிக்கலாம்.

மேலும் பல வித்தியாசமான கதைகள் (Kathaigal) படிக்க இணைந்திருங்கள். 


3 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Hello bro your writing skill is awesome if you any idea to guest post on my site please contact me Tech and Tricks

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon